செய்திகள்
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி -இஸ்ரோ அறிவிப்பு
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து அனைவரும் முயற்சித்து வருவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு:
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 7ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.
400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனையடுத்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. ஆனாலும், லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கண்டறியப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 7ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.
400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இதனையடுத்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. ஆனாலும், லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கண்டறியப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இஸ்ரோ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.