செய்திகள்
100 நாட்களாக முன்னேற்றம் இல்லாத மோடியின் அரசுக்கு நல்வாழ்த்துகள் - ராகுல் கிண்டல்
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முன்னேற்றம் இல்லாத அரசுக்கு நல்வாழ்த்துகள் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
2019- பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து 30-5-2019 அன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பிரதமர் மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ’முன்னேற்றம் இல்லாத அரசுக்கு நல்வாழ்த்துகள்!’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமை மற்றும் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டமிட்ட இலக்கு ஏதுமில்லாத நிலையில் இல்லாத நிலையில் ஜனநாயகத்தை நீர்த்துப்போக வைப்பதிலும் விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதிலும் இந்த அரசின் 100 நாள் ஆட்சிக்காலம் கடந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
2019- பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து 30-5-2019 அன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் 100 நாட்கள் அரசு செய்த சாதனைகளை மத்திய மந்திரிகளும் பாஜக பிரமுகர்களும் பட்டியலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பிரதமர் மோடி பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ’முன்னேற்றம் இல்லாத அரசுக்கு நல்வாழ்த்துகள்!’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமை மற்றும் சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டமிட்ட இலக்கு ஏதுமில்லாத நிலையில் இல்லாத நிலையில் ஜனநாயகத்தை நீர்த்துப்போக வைப்பதிலும் விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெறிப்பதிலும் இந்த அரசின் 100 நாள் ஆட்சிக்காலம் கடந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.