செய்திகள்
அசாமில் 3,3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.03 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள கார்பி அங்லோங் பகுதியில் இன்று காலை 7.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
ஏற்கனவே, இன்று அதிகாலை 12.05 மணிக்கு இமாசல பிரதேசத்தில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.