செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட பகுதி

டெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

Published On 2019-09-07 17:08 GMT   |   Update On 2019-09-07 17:08 GMT
தலைநகர் டெல்லியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.







புதுடெல்லி:

டெல்லியின் மேற்கில் பஞ்சாபி பாஹா என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் எஞ்சின் ஆயிலை சேமித்து வைக்க உதவும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. 

இந்நிலையில், இன்று அந்த எண்ணெய் கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் ஆயில் எரிபொருள் என்பதால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும், விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கு கட்டிடத்திற்குள் சிலர்  சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
Tags:    

Similar News