செய்திகள்
கைது செய்யப்பட்ட அமித் ஜோகி

சத்தீஷ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் கைது

Published On 2019-09-03 07:17 GMT   |   Update On 2019-09-03 07:17 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகனை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலாஸ்பூர்:

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி. சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் தலைவரான இவர் மீது, 2013ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சமீரா பைக்ரா கடந்த பிப்ரவரி மாதம் மோசடி புகார் அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில், 2013 சட்டமன்றத் தேர்தலில் மர்வாகி தொகுதியில் போட்டியிட்ட அமித் ஜோகி, வேட்பு மனுவில் தனது பிறந்த ஊர் தொடர்பாக தவறான தகவலை அளித்திருந்தார் என்றும், அது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



இந்த புகார் மீது கடந்த 6 மாத காலமாக விசாரணை நடத்திய போலீசார், இன்று அமித் ஜோகியை கைது செய்தனர். பிலாஸ்பூர் மாவட்டம் மர்வாகி சதான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். அமித் ஜோகி கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News