செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஜப்பான் மாணவர்கள் வருகை
மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஜப்பானில் இருந்து மாணவர்கள் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தானே:
.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். விநாயகரை வழிபட்டபின் அந்த சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு தானே நகரில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை காண, ஜப்பானில் இருந்து மாணவர்கள் வருவதாக தானே நகரின் பிரபல கல்வி குழும நிறுவனர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் கியோட்டோ சாங்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள 16 மாணவர்கள் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிக்காக வர உள்ளனர். அப்போது அவர்கள் இவ்விழாவையும் காண உள்ளனர் என தெரிவித்தார்.