செய்திகள்
சித்தராமையா

எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி- சித்தராமையா

Published On 2019-08-28 02:10 GMT   |   Update On 2019-08-28 02:10 GMT
முதல்-மந்திரி எடியூரப்பாவை கட்டுப்படுத்தவே 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஜமகண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவை முதல்- மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை. ஆனால் அவர் கெஞ்சி கேட்டு, முதல்-மந்திரி பதவியை பெற்றுள்ளார். துணை முதல்-மந்திரி பதவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. அந்த பதவிக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது.

கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 பேருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியுள்ளது. இதை எடியூரப்பா விரும்பவில்லை. எடியூரப்பாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக் ஆகியோரை பா.ஜனதா ஓரங்கட்டியுள்ளது.



அதனால் பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்க வாய்ப்புள்ளது. எடியூரப்பா எத்தனை நாட்கள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டோம். இந்த பா.ஜனதா அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News