செய்திகள்
மாதிரி புகைப்படம்

குஜராத்தில் சோகம்: ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி பலி

Published On 2019-08-27 13:51 GMT   |   Update On 2019-08-27 13:51 GMT
குஜராத் மாநிலத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் நீரில் ழூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் புவாநகர் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் சதரத்தன்பர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கேரி என்ற ஆறு பாய்கிறது.

 இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை செய்ய வந்திருந்த 10 பேர் கொண்ட குழு ஒன்று மதிய உணவை முடித்து விட்டு கேரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றது.

ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரின் வேகத்தில் குழுவில் இருந்த ஒரு நபர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றும் எண்ணத்தோடு மற்றவர்களும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் 10 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 

இதை கண்ட கிராம மக்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் 5 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
Tags:    

Similar News