செய்திகள்
விபத்துக்குள்ளான வாகனங்கள்

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 16 பேர் பலி

Published On 2019-08-27 10:01 GMT   |   Update On 2019-08-27 10:01 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 16 பேர் பலியாகினர்.
ஷாஜகான்பூர்:

உத்தர பிரதேச மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை 24-ல்  உள்ள ஜம்கா ரவுண்டானாவில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில்16 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் தெரிவிக்கையில், “அதி வேகமாக வந்த லாரி ஒன்று டெம்போ மற்றும் வேன் மீது மோதியுள்ளது. இதில் வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் வேன் மீது லாரி கவிழ்ந்தது. 

ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 16 பேர் சம்ப இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

அரசு அதிகாரிகள் கூறுகையில், சம்பவம் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார், எனவும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News