செய்திகள்
இளம்பெண் கற்பழிப்பு

உ.பி. ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியை கற்பழித்த ஊழியர்கள்

Published On 2019-08-26 10:03 GMT   |   Update On 2019-08-26 10:03 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியை கற்பழித்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 17 வயது இளம்பெண் சிகிச்சைக்கு சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த வார்டு ஊழியர் சிவானந்தன் (23) என்பவர், பெண்ணிடம் அந்த மாடியில் உள்ள அலமாரியை திறந்து காட்டி விட்டு இங்கு ஊசி, மருந்துகள் கையிருப்பு இல்லை. கீழ் மாடிக்கு செல்லுங்கள், ஊசி போடுகிறேன் என கூறி உள்ளார்.

அந்த பெண் வார்டு ஊழியருடன் கீழ் மாடிக்கு சென்றதும் அவர் அங்கிருந்த ஊசியை எடுத்து போட்டுவிட்டு, சில மாத்திரைகளை கொடுத்தார்.

அப்போது மற்றொரு ஊழியரான விஷால் (24) என்பவரும் அங்கு நின்றுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் பெண் மயக்கம் அடைந்தார்.

வெகுநேரம் கழித்து பெண் கண் விழித்த போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் பலாத்காரம் செய்த சிவானந்தன், விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் சிவானந்தன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான விஷால் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி செய்யும் ஊழியராக இருந்துள்ளார். இது தொடர்பாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கைதான விஷால், சிவானந்தன் ஆகியோர் மீது மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News