செய்திகள்
பார்சலில் பாம்பு

ஒடிசா மாநிலத்தில் பார்சலில் வந்த பாம்பு.. அலறிய இளைஞர்...

Published On 2019-08-26 09:14 GMT   |   Update On 2019-08-26 09:14 GMT
ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு வந்த பார்சலில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அந்த பார்சலை பெற்ற இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.
புவனேஷ்வர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் ரைரங்பூர் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமரன். இவருக்கு அம்மாநிலத்தின் குண்டூர் பகுதியில் இருந்து கூரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. 

அதனை திறந்து பார்த்தபோது, அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. இதனை ஒவ்வொன்றாக எடுத்து முத்து பார்த்துள்ளார். அதன் பின்னரே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. 

பார்சலின் அடிப்பகுதியில் இருந்த 4 அடி பாம்பு ஒன்று திடீரென தலையை நீட்டி நின்றது. இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். பின்னர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News