செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

மியான்மர்- நாகலாந்தில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

Published On 2019-08-26 03:57 GMT   |   Update On 2019-08-26 03:57 GMT
மியான்மர் மற்றும் நாகலாந்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
புதுடெல்லி:

மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.19 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதேபோல் இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தின் டியன்சாங் பகுதியியில் இருந்து 132 கிமீ தொலைவில்  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவாகியிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் பூகம்பவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
Tags:    

Similar News