செய்திகள்
அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அத்வானி

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மரணம் - அத்வானி, ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி

Published On 2019-08-24 13:09 GMT   |   Update On 2019-08-24 13:09 GMT
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 



டெல்லியில் வைக்கப்பட்டு உள்ள அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News