செய்திகள்
கட்டிடம் இடிந்த பகுதியில் மீட்பு பணி நடைபெற்ற காட்சி

மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி- பலர் காயம்

Published On 2019-08-24 03:17 GMT   |   Update On 2019-08-24 03:17 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவண்டியில் பாழடைந்த நிலையில் இருந்த 4  மாடி குடியிருப்பு கட்டிடம், விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், அந்த கட்டிடத்தில் வசித்த பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.

அதன்படி, அங்கு வசித்தவர்களில் பலர் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறினர். இன்று அதிகாலையில் சிலர் தங்கள் பொருட்களை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.



இதையடுத்து மீட்புக் குழுவினர், கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நிலவரப்படி 2 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News