செய்திகள்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி

மேற்கு வங்கத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி

Published On 2019-08-23 08:17 GMT   |   Update On 2019-08-23 08:17 GMT
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவ்வகையில் கச்சுவா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் இன்று கூடியிருந்தனர். அப்போது கோவில் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடடினயாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News