செய்திகள்
மோடியின் சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்தனர்: டிஸ்கவரி சேனல் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனையாக 1½ கோடி பேர் பார்த்துள்ளதாக டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியுள்ளார்.
மும்பை :
கடந்த 12-ந் தேதி டிஸ்கவரி சேனல் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற சாகச நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதுபற்றி டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியிருப்பதாவது:-
அதோடு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தவர்களில் 93 சதவீதம் பேர் (சேனல் ஷேர்) டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர். இது ஆச்சரியப்படுத்தும் வகையில் 50 மடங்கு அதிகமாகும். அந்த நிகழ்ச்சியை விரும்பியதாக 30 லட்சம் பேர் கருத்து பதிவு செய்துள்ளனர். இந்த சாதனைகள் மூலம் டிஸ்கவரி சேனல் ஜீ மற்றும் ஸ்டார் பிளஸ் சேனல்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதல் ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புகள் என ஒட்டுமொத்தமாக அந்த நிகழ்ச்சியை இதுவரை 4.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 12-ந் தேதி டிஸ்கவரி சேனல் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற சாகச நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதுபற்றி டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியிருப்பதாவது:-
61 லட்சம் பார்வையாளர்களை கொண்ட டிஸ்கவரி சேனலில், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை அதிகபட்சமாக 37 லட்சம் பேர் தான் பார்த்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனை அளவாக 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.
அதோடு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தவர்களில் 93 சதவீதம் பேர் (சேனல் ஷேர்) டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர். இது ஆச்சரியப்படுத்தும் வகையில் 50 மடங்கு அதிகமாகும். அந்த நிகழ்ச்சியை விரும்பியதாக 30 லட்சம் பேர் கருத்து பதிவு செய்துள்ளனர். இந்த சாதனைகள் மூலம் டிஸ்கவரி சேனல் ஜீ மற்றும் ஸ்டார் பிளஸ் சேனல்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதல் ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புகள் என ஒட்டுமொத்தமாக அந்த நிகழ்ச்சியை இதுவரை 4.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.