செய்திகள்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்

டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்

Published On 2019-08-21 18:26 GMT   |   Update On 2019-08-21 18:26 GMT
நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி,ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மதியம் வரை சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்றும், ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சி.பி.ஐ. அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News