செய்திகள்
சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரி

ப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு

Published On 2019-08-21 15:54 GMT   |   Update On 2019-08-21 15:54 GMT
டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு கதவை திறக்காததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.

ப.சிதம்பரம் வீட்டுக்கு சென்றதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிதம்பரம் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News