செய்திகள்
ராஜஸ்தானில் இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து -3 வீரர்கள் பலி
ராஜஸ்தானில் இராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்த விபத்தில், 3 வீரர்கள் பலியாகினர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் சாகுட்டான் மலைப்பகுதியில் இராணுவ வீரர்கள், இராணுவ வாகனத்தில் வழக்கம்போல சென்றுக் கொண்டிருந்தனர்.
அடர்ந்த மலைப்பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், திடீரென கவிழ்ந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பயணம் செய்த வீரர்களுள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த மற்ற 3 வீரர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சாகுட்டான் மலைப்பகுதியில் இராணுவ வீரர்கள், இராணுவ வாகனத்தில் வழக்கம்போல சென்றுக் கொண்டிருந்தனர்.
அடர்ந்த மலைப்பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், திடீரென கவிழ்ந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பயணம் செய்த வீரர்களுள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த மற்ற 3 வீரர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.