செய்திகள்
அகிலேஷ் சிங் தனது மகள் அதிதியுடன்

ரேபரேலி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

Published On 2019-08-20 07:39 GMT   |   Update On 2019-08-20 07:39 GMT
உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ் சிங் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அகிலேஷ் சிங் உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மக்களால் ‘ராபின்ஹூட்’ என்று அழைக்கப்படும் இவர் ரேபரேலி தொகுதியில் 5 முறை  சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இதில் 3 முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு ஒரு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் அதிதி ரேபரேலி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

ரேபரேலி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் இவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. 

Tags:    

Similar News