செய்திகள்
நடைபாதையில் ஏறி பொதுமக்கள் மீது மோதிய கார்

நடைபாதையில் காரை ஏற்றிய போதை டிரைவர்... 7 பேர் காயம்

Published On 2019-08-19 07:37 GMT   |   Update On 2019-08-19 07:37 GMT
கர்நாடகாவில் குடிபோதையில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், திடீரென கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு, பின்னர் நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது.

இதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி பதிவு வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News