செய்திகள்
இந்திய ராணுவ வீரர்கள்

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: உஷார் நிலையில் ராணுவம்

Published On 2019-08-16 13:08 GMT   |   Update On 2019-08-16 13:13 GMT
காஷ்மீரில் பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து ராணுவம் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் ரானுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தற்போது காஷ்மீரில் மக்களிடையே பயத்தை உருவாக்கவும், வளர்ச்சியை தடுக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன் இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.



இந்நிலையில், தலைமை செயலாளரின் எச்சரிக்கையை அடுத்து காஷ்மிரில் உள்ள இந்திய ராணுவம், விமானப்படை உள்பட அனைத்து பாதுகாப்பு துறைகளும் உஷார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News