செய்திகள்
தமிழகம், புதுவை, கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், நாளை முதல் வடமாநிலங்களில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.