செய்திகள்
ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும் - பிரதமர் மோடி
ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும். அவற்றிற்கு பதிலாக துணி, சணல் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி, சணல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படும் பைகளை நிறுவனங்கள் விநியோகம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பை கிடைக்காது; துணிப்பைகளை கொண்டு வாருங்கள் என கடைகளில் எழுதி வைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி, சணல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படும் பைகளை நிறுவனங்கள் விநியோகம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.