செய்திகள்
சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜ் மறைவு - டெல்லி அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு

Published On 2019-08-07 03:51 GMT   |   Update On 2019-08-07 03:51 GMT
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் நினைவை போற்றும் வகையில் அவரது மறைவுக்கு அரசு சார்பில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News