செய்திகள்
இறுதி டுவிட்டர் பதிவில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா
காலமான முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது இறுதி டுவிட்டர் பதிவில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலமான முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது இறுதி டுவிட்டர் பதிவில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று இரவு 7 மணிக்கு சுஷ்மா சுவராஜ் எழுதிய இறுதி டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு நன்றி. தம் வாழ்க்கையில் இந்த நாளை காண காத்திருந்தேன் என பதிவிட்டிருந்தார்.
மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியதும் இந்த பதிவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.