செய்திகள்
பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை: அமித் ஷா

Published On 2019-08-06 11:40 GMT   |   Update On 2019-08-06 11:40 GMT
மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு பரூக் அப்துல்லா வீட்டுக்காவலிலும் இல்லை, கைதும் செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய தி.மு.க. மக்களவை எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த அவையில் இருக்க வேண்டிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் எங்கள் நண்பருமான பரூக் அப்துல்லா எங்கே? என்று கேள்வி  எழுப்பினார்.



டி.ஆர்.பாலு-வின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது:-

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை யாரும் கைதும் செய்யவில்லை, அவர் வீட்டு காவலிலும் வைக்கவில்லை. மேலும், அவர் அவரது சொந்த விருப்பத்தின் படியே தனது வீட்டில் இருக்கிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News