செய்திகள்
ஜார்க்கண்டில் 3 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து தலை துண்டித்து கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து தலை துண்டித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்ஷெட்பூர்:
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள டாடாநகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் 3 வயது பெண் குழந்தை தனது தாயுடன் தூங்கியது.
திடீரென குழந்தை காணாமல் போகவே தாய் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் குழந்தையை கடத்திய அதே பகுதியை சேர்ந்த ரிங்கு ஷா (வயது 36), கைலாஷ் குமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்தாரம் செய்ததும், பின்னர் குழந்தையின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.
குழந்தையை கடத்தி சென்று தனி அறையில் வைத்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் குழந்தை இறந்ததும் தலையை துண்டித்து ஒரு இடத்தில் வீசிவிட்டு உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து 4 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச்சென்று சாலையோரம் வீசி உள்ளனர்.
போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். ஆனால் தலை கிடைக்கவில்லை.
குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. எனவே குழந்தையை அதிகமாக துன்புறுத்தி இருப்பதை உறுதி செய்த போலீசார் குழந்தையின் தலையை மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள டாடாநகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் 3 வயது பெண் குழந்தை தனது தாயுடன் தூங்கியது.
திடீரென குழந்தை காணாமல் போகவே தாய் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் குழந்தையின் வாயை மூடி தூக்கிச் செல்வது தெரிய வந்தது. அந்த காட்சிகளை குழந்தையின் தாயிடம் காட்டிய போது, கடத்திய நபர்களை தனக்கு தெரியும் என கூறி அடையாளம் காட்டினார்.
அதன் அடிப்படையில் குழந்தையை கடத்திய அதே பகுதியை சேர்ந்த ரிங்கு ஷா (வயது 36), கைலாஷ் குமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்தாரம் செய்ததும், பின்னர் குழந்தையின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.
குழந்தையை கடத்தி சென்று தனி அறையில் வைத்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் குழந்தை இறந்ததும் தலையை துண்டித்து ஒரு இடத்தில் வீசிவிட்டு உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து 4 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச்சென்று சாலையோரம் வீசி உள்ளனர்.
போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டனர். ஆனால் தலை கிடைக்கவில்லை.
குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. எனவே குழந்தையை அதிகமாக துன்புறுத்தி இருப்பதை உறுதி செய்த போலீசார் குழந்தையின் தலையை மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.