செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு

Published On 2019-07-31 05:42 GMT   |   Update On 2019-07-31 05:42 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.
புதுடெல்லி:

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.

இதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள்? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.  8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன? என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து, 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News