செய்திகள்
அம்மாவை நினைத்து பாராளுமன்றத்தில் கண்ணீர் வடித்த அ.தி.மு.க., எம்.பி.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த ஜெயலலிதாவை நினைத்து அ.தி.மு.க., எம்.பி. மைத்ரேயன் கண்ணீர் விட்டு அழுதார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
தனது இறுதி உரையின்போது கண்ணீர் மல்க, நா தழுதழுக்க பேசிய மைத்ரேயேன், ‘என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து மூன்று முறை இந்த அவையின் உறுப்பினராக்கி இங்கு அனுப்பி வைத்த எனது அன்புக்குரிய தலைவர் ‘அம்மா’ அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியறிலை இந்த தருணத்தில் இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு மற்றும் சில எம்.பி.க்களும் மைத்ரேயன் உரையாற்றியதை சோகத்துடன் கவனித்து கேட்டனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இவர்களுக்கு இன்று பிரிவு உபச்சாரம் தெரிவிக்கும் வகையில் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பேசினர்,
இந்நிலையில், தனது எம்.பி. பதவிக்காலத்தின் கடைசி நாளான இன்று தனக்கு இந்த வாய்ப்பை முன்னர் அளித்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவை நினைத்து அ.தி.மு.க., எம்.பி. மைத்ரேயன் கண்ணீர் விட்டு அழுதார்.
தனது இறுதி உரையின்போது கண்ணீர் மல்க, நா தழுதழுக்க பேசிய மைத்ரேயேன், ‘என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து மூன்று முறை இந்த அவையின் உறுப்பினராக்கி இங்கு அனுப்பி வைத்த எனது அன்புக்குரிய தலைவர் ‘அம்மா’ அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியறிலை இந்த தருணத்தில் இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு மற்றும் சில எம்.பி.க்களும் மைத்ரேயன் உரையாற்றியதை சோகத்துடன் கவனித்து கேட்டனர்.