செய்திகள்
பீகார் வெள்ளம்

பீகாரில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரிப்பு

Published On 2019-07-24 05:05 GMT   |   Update On 2019-07-24 05:05 GMT
பீகாரில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்கு வசித்த பல்லாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பீகாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News