செய்திகள்
போராட்டம் நடத்திய விவசாயிகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்- வைகோ பங்கேற்பு

Published On 2019-07-23 09:15 GMT   |   Update On 2019-07-23 09:15 GMT
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.
புதுடெல்லி:

தமிகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் கோவை முதல் பெங்களூர் வரை விளைநிலங்கள் வழியாக கெயில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் உள்பட விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர் ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஜந்தர் மந்தர் சென்று தமது ஆதரவை தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.



இப்போராட்டத்தில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டங்களை எதிர்ப்பதாகவும் கூறினார்.
Tags:    

Similar News