செய்திகள்
நிலநடுக்க அளவை காட்டும் கருவி

அருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

Published On 2019-07-20 03:02 GMT   |   Update On 2019-07-20 03:02 GMT
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இடாநகர்:

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்  உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. 

அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று மதியமும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News