செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடாநகர்:
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் இன்று மதியம் 2.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஜோர்ஹாட்டில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பகல் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகள் லேசாக அதிர்ந்தன.
இந்த நில அதிர்வு அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.