செய்திகள்
முதல் மந்திரி குமாரசாமி

இன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்

Published On 2019-07-19 10:24 GMT   |   Update On 2019-07-19 10:24 GMT
இன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பாக இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்திருந்தார்.

ஆனால், கவர்னர் விதித்த கெடு நேரம் முடிந்தும் வாக்கெடுப்பு நடைபெறாததால் அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் இன்னும் தீரவில்லை. இதற்கிடையில், சட்டசபையை 3 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.



இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என முதல் மந்திரி குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
Tags:    

Similar News