செய்திகள்
சுதந்திர தின உரையாற்றும் மோடி (கோப்பு படம்)

சுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம்? - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி

Published On 2019-07-19 09:50 GMT   |   Update On 2019-07-19 09:50 GMT
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றவுள்ள சிறப்புரையில் என்னென்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆண்டுதோறும் நமது நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர்கள் அன்றைய நாளில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே  சிறப்புரையாற்றுவது மரபாகவும் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் சுதந்திர தினவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனது தலைமையிலான இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வரும் 15-ம் தேதி காலை மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்.



இந்நிலையில், ’இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது எனது உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது விலைமதிப்புள்ள கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இதற்காக ‘நமோ ஆப்’பில் ஒரு பிரத்யேக தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

உங்களுடைய எண்ணங்களை டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து  நம் நாட்டில் வாழும் 130 கோடி மக்களும் கேட்கட்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News