செய்திகள்
மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்

2-வது வீடு வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்

Published On 2019-07-17 18:36 GMT   |   Update On 2019-07-17 18:36 GMT
2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது என மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய பணிகள்) சட்டம் 1960-ன்படி அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டவோ, வாங்கவோ தனது வருங்கால வைப்பு நிதித்தொகையில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

இந்த சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் வீடு வாங்கவோ, கட்டவோ வருங்கால வைப்பு நிதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட மந்திரி, இதில் மற்றொரு வீட்டுக்காக 2-வது முறையாக பணம் எடுக்கும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதிபட கூறினார். 
Tags:    

Similar News