செய்திகள்
தண்ணீர் தொட்டி

3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை- ராஜஸ்தானில் பரிதாபம்

Published On 2019-07-15 16:28 GMT   |   Update On 2019-07-15 16:28 GMT
ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் மாவட்டத்தில் இன்று மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் மாவட்டத்திற்கு உட்பட உச்சேடா கிராமத்தை சேர்ந்தவர் ராதா தேவி(29). இவரது கணவர் இன்று வேலைக்கு சென்றிருந்தபோது தனது வீட்டின் அருகாமையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு ராதா தேவி சென்றார். அங்கு யாரும் இல்லாத போது திடீரென்று தனது 3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார். 

அருகாமையில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஒடிவந்து காப்பாற்றுவதற்குள் ராதா தேவி மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் சுமித், மாயா (7), யாச்சிக்கா(4) ஆகிய இரு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராதா தேவியின் இந்த துயர முடிவுக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News