செய்திகள்
முன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் தனது ராஜ்யசபை எம்.பி.பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
புதுடெல்லி:
சமாஜ்பாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் விளங்கிய எஸ்.சந்திரசேகர் 10-11-1990 முதல் 21-6-1991 வரை 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 8-7-2007 அன்று தனது 80-வது வயதில் சந்திரசேகர் காலமானார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் தந்தையின் வழியில் அரசியலில் ஈடுபட்டு வந்தார். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நீரஜ் சேகர் இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.