செய்திகள்
பாலாசாகேப் திராட்

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்

Published On 2019-07-14 02:04 GMT   |   Update On 2019-07-14 02:04 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
மும்பை:

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.



இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் 6 பேர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News