செய்திகள்
ராகுல் காந்தி

உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்த ராகுல் காந்தியின் கருத்து

Published On 2019-07-11 03:17 GMT   |   Update On 2019-07-11 03:17 GMT
உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிச் சுற்றில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி தோல்வி அடைந்தது. இது குறித்து ராகுல் காந்தி தனது கருத்தினை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
புது டெல்லி:

இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியின் தோல்வி 100 கோடி மக்களின் இதயங்களை உடைத்து விட்டது. இருப்பினும் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடியது.

எங்களது அன்பையும், மரியாதையையும் வென்றிருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப்பெற்று உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார். 
Tags:    

Similar News