செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகா சட்டசபை வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் நாளை பாஜகவினர் தர்ணா

Published On 2019-07-09 14:54 GMT   |   Update On 2019-07-09 14:54 GMT
குமாரசாமி ராஜினாமாவை வலியுறுத்தி கர்நாடகா சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில் நாளை பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் என அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா இன்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.



இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, ‘ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை காலை 11 மணியளவில் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே எனது தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News