செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் விமானம் அவசர தரையிறக்கம்
மகாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டிற்கு ஓமன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் (எண் 204) இன்று மாலை புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 206 பயணிகள் இருந்தனர்,
விமான நிலையத்தில் புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விசாரணையில், புறப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அதன் இயந்திரங்களில் ஒன்று செயல்படவில்லை. இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாலை 4.50 மணியளவில் ஒற்றை இயந்திரத்துடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.