செய்திகள்

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்

Published On 2019-06-27 09:20 GMT   |   Update On 2019-06-27 09:20 GMT
தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதில் வருமாறு:

தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 1139 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது தெரியவந்தது. மேலும் 105 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது.



35 இடங்களில் நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Tags:    

Similar News