செய்திகள்

அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு

Published On 2019-06-26 11:52 GMT   |   Update On 2019-06-26 11:52 GMT
அமர்நாத் யாத்திரை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகர்:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் வந்தடைந்தார். 

இந்த பயணத்தின் ஒருகட்டமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றனர். அவர்களுடன் உள்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கைவுபாவும் பங்கேற்றுள்ளார்.
 
உள்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு அமித்ஷா காஷ்மீர் மாநிலத்திற்கு வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News