செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - பயங்கரவாதி கொல்லப்பட்டான்

Published On 2019-06-26 09:15 GMT   |   Update On 2019-06-26 09:15 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட டிரால் நகரின் அருகேயுள்ள பிரான்பத்ரி வனப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.



சிலமணி நேரம் நீடித்த இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News