செய்திகள்

மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு

Published On 2019-06-26 06:22 GMT   |   Update On 2019-06-26 06:22 GMT
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வந்துள்ளார்.
 
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக் பாம்பியோ, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.



இதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் மைக் பாம்பியோ சந்தித்து பேச உள்ளார்.  இந்த சந்திப்பில் இறக்குமதி வரி விதிப்பு, பாதுகாப்பு, எச்1பி விசா போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் மைக் பாம்பியோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News