செய்திகள்

போக்குவரத்து விதியை மீறினால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மடங்கு கூடுதல் அபராதம்

Published On 2019-06-26 05:27 GMT   |   Update On 2019-06-26 05:28 GMT
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதன்படி விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளிட்டோர் விதி மீறலில் ஈடுபட்டால் 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
Tags:    

Similar News