செய்திகள்
மெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர் அறிவிப்பு
நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று ஆன்டிகுவா பிரதமர் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி :
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இந்த மோசடி அம்பலமாவதற்குள் அவர்கள் நாட்டை விட்டு தப்பினர்.
நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆன்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ள சோக்சி, அங்குதான் உள்ளார்.
இதையொட்டி ஆன்டிகுவா பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் கருத்து தெரிவிக்கையில், ‘‘அனைத்து சட்டப்பூர்வ பரிகாரங்களையும் தேடிய பின்னர் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட முடியும்’’ என கூறி உள்ளார்.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன.
இந்த மோசடி அம்பலமாவதற்குள் அவர்கள் நாட்டை விட்டு தப்பினர்.
நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆன்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ள சோக்சி, அங்குதான் உள்ளார்.
இதையொட்டி ஆன்டிகுவா பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் கருத்து தெரிவிக்கையில், ‘‘அனைத்து சட்டப்பூர்வ பரிகாரங்களையும் தேடிய பின்னர் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட முடியும்’’ என கூறி உள்ளார்.