செய்திகள்

ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்

Published On 2019-06-24 10:43 GMT   |   Update On 2019-06-24 10:46 GMT
வங்கி கணக்கு, சிம் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வகைசெய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

இந்தியர்களின் தனிநபர் அடையாள எண்ணாக ஆதார் அட்டை நடைமுறையில் உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது. 

ஆனால், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம் காலாவதியானதால், அதற்கு மாற்றாக, வங்கி கணக்கு, சிம் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வகைசெய்யும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மசோதாவிற்கு எம்.பி.பிரேமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை எளிதாக பெற இந்த மசோதா வழிவகை செய்யும் என குற்றம்சாட்டினார்.



இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப தான் ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. இதுவரை 60 கோடி பேர் ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கொடுத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதேபோல், ஆதார் திருத்த மசோதாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆதார் திருத்த மசோதா மீதான அச்சத்தையும், எதிர்ப்பையும் முன்வைத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News